கிளியூர் மலையமான்கள் திருமுடிக்காரி. திருக்கோலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிநடத்திய மலைய மன்னன். முள்ளூரில் இவனை எதிர்த்த ஆரிய மன்னர் பலர், இவனது ஒரே வேல் படைக்கு அஞ்சி ஓடினார்கள் என்பதை நற்றிணைப் பாடல் (170) ஒன்று கீழ்க்காணும் வகையில் புகழ்ந்துப் பேசுகிறது: “ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழிந்த ஒள்வாள் மலையனது ஒரு வேற்கு ஓடியாங்கு” காரியின் வழித்தோன்றல்கள், திருக்கோலூரையும் சுற்றுவட்டப் பகுதிகளையும் வழிநடத்தினர். இம்மலையமான்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் கிளியூர் மலைய மான்களாவர். இவர்கள் குறித்து ஆய்வறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் (நூல்: பிற்கால சோழர் சரித்திரம்) தரும் தகவல்கள் பின்வருமாறு: “கிளியூர் மலையமான்கள் முதற்குலோத்துங்கச் சோழன் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த குறுநில மன்னர்கள். இவர்கள் தென்னார்க்காடு ஜில்லாவில் அதன் வடமேற்குப் பகுதியாய் அமைந்திருந்த சேதி நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருந்த குறுநில மன்னர்கள். மலையமான் மரபினர். இவர்கள் வழிவழி ஆண்டு வந்தமை பற்றி அந்நாடு மலையமான் நாடு எனவும் மலாடு எனவும் வழங்கப்பட்டு வந்தது உணரற்பாலது. இவர்கள் சேதிராயர் எனும் ...